டிசம்பர் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அரசாங்கம் கடுமையாக உழைத்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த உடன்படிக்கையை எட்டுவதற்கு எதிர்பார்த்த காலத்தை விட ஒரு மாதம் அதிகமாக ஆகலாம் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு பல மாதங்கள் ஆகலாம் என வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் குறிப்பிட்ட அறிக்கையை வெளியிட முடியாது என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.