எதிர்வரும் 2023ஆம் ஆண்டுக்கான 4,000 இலங்கை தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் பத்து சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்துள்ளது.
இதன்படி, 20 வருடங்களின் பின்னர், சிங்கப்பூரில் உள்ள சுகாதாரத் துறையில் இலங்கை தாதியர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் தொழிலாளர் மற்றும் நலன்புரித் தலைவர் நிபுன திப்புதுமுன்வ கட்டுநாயக்க விமான நிலையத்தில் தெரிவித்தார்.
மேலும், சிங்கப்பூர் சுகாதார அதிகாரிகள் குழு சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு 11.30 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SK-468 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மேலும், சிங்கப்பூர் சுகாதார அமைச்சினால் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த ஆய்வுச் சுற்றுப்பயணத்தில், சிங்கப்பூர் சுகாதார அதிகாரிகள் குழுவானது, இலங்கை செவிலியர் கல்லூரியில், ஸ்ரீ ஜெயவர்தன ஜெனரல், கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை போன்றவற்றை இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை சுகாதாரத் துறை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளது.
அத்தோடு, சிங்கப்பூரில் சுகாதாரத் துறையானது சுகாதார அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட அரசுக்கு சொந்தமான நிறுவனங்களால் இயக்கப்படுகின்ற இலங்கை தாதியர்கள் மற்றும் தற்போது பொது மருத்துவமனைகளில் பணிபுரியும் தாதிகளில் இருந்து வேலைவாய்ப்புக்காக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும்,அதற்காக போட்டிப் பரீட்சைகள் மற்றும் நேர்முகத்தேர்வுகள் மூலம் உரிய தாதியர்களைத் தெரிவு செய்ய சிங்கப்பூர் அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர். இந்த திட்டத்தின் முன்னோடித் திட்டமாக 150 இலங்கை தாதியர்கள் தெரிவு செய்யப்பட்டு முதல் குழுவாக நாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
இவையாவும், சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் திருமதி.சசிகலா பிரேமவர்தன அவர்களின் மேற்பார்வையில் அலுவலகத்தின் தொழிலாளர் நலன்புரிப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.