வவுனியா மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என போலியாக காட்டி நீல மாணிக்க கல்லினை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவரை லக்கல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் வாரியபொல, பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் பல தொலைக்காட்சி நாடகங்களில் பொலிஸ் வேடங்களில் நடித்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். அவரிடமிருந்த நீல நீல மாணிக்க கல்லினையும் மற்றும் சொகுசு காரொன்றினையும் பொலிஸார் கைப்பெற்றியுள்ளனர்.