இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி ஹனா சிங்கர் இன்று (23ம் திகதி) பொது பாதுகாப்பு அமைச்சுக்கு வந்து பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ்ஸை சந்தித்துள்ளார்.
அண்மைய பொதுப் போராட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், இலங்கை காவல்துறையின் நடவடிக்கை குறித்து ஹனா சிங்கர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும், இலங்கையின் தற்போதைய ஜனநாயக அரசியல் சூழலை தான் பாராட்டுவதாகவும் ஐ.நா பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஆபத்தான போதைப்பொருளுக்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை பூரண ஆதரவை வழங்கும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ்ஸிடம் தெரிவித்தார்.
மேலும், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதாக ஹனா சிங்கர் அமைச்சர் திரன் அலஸ்ஸிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.