அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நீண்ட காலமாக கடையில் பணியாற்றிய மேலாளர் ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.