வைத்தியர்களுக்கான வயது வரம்பை 60 ஆக நீடிக்க தற்போதைக்கு சாத்தியமில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்,மருத்துவர்களின் வயது தொடர்பான இறுதித் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை ஒத்திவைக்குமாறு சஜித் பிரேமதாச கேட்டுக் கொண்டார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அரச உத்தியோகத்தர்களுக்கு 60 வயதில் ஓய்வு வழங்குவது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அதனை மாற்ற நாடாளுமன்றமே மீண்டும் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டின் 90 வீதமான மின்சாரம் மற்றும் எரிசக்தி நெருக்கடி அடுத்த வருடத்திற்குள் தீர்க்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், இவ்விவாதமானது மின்சாரம் மற்றும் எரிசக்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்களின் செலவின தலையீடுகள் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இரவு 07.00 மணி வரை நடைபெறவுள்ளது.