கொழும்பு கிராண்ட்பாஸ் சமகிபுர அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறு குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
ஒன்றரை வயது சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், குழந்தையின் தாயின் சகோதரரே குழந்தையை கீழே வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக குறித்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.