மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், மின்சார கட்டணத்தில் திருத்தம் செய்யாமல் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செலவின தலைப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்படி., மின்சார சபையினால் இன்று ஒரு மின் மீட்டர் கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும்.விவாதத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், போதைப்பொருள் லாபம் ஈட்டும் போது அரசியல் செல்வாக்கு காரணமாக சிபெட்கோ நிறுவனம் நஷ்டம் அடைகின்றது என தெரிவித்தார்.
மேலும்,கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே மின்சார சபையின் கடன் சுமை ஒரு இலட்சம் கோடி ரூபாவை தாண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் தொடர்பான வரவு செலவுத் திட்ட குழு வாய்ப்பு விவாதத்தின் போதே இக்கருத்து தெரிவித்ததோடு அடுத்த வருடத்திற்குள் நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரம் மற்றும் எரிசக்தி நெருக்கடிக்கு சுமார் 90 வீதமான தீர்வு காண முடியும் என இன்று பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.