பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
போதைப்பொருளுக்காக மருந்தகங்களில் விற்கப்படும் போதைப் பொருட்களை சிறுவர்கள் மத்தியில் பிரபலப்படுத்த சில கடத்தல்காரர்கள் செயற்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களின் மாற்றங்கள் மற்றும் அவர்களின் நடத்தை முறைகள் தொடர்பில் பெற்றோர்கள் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.