ஓமன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு பணிபுரியச் சென்றுள்ள 154 பேரை நாட்டுக்கு அழைத்துவர ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் வெளிநாடு சென்றுள்ளதாகவும், அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான அமைச்சரவை அனுமதியை அமைச்சர் பெற்றுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.
வெளிநாடுகளுக்கு சுற்றுலா விசாவில் ஆட்களை அனுப்பி வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட 13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.