வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தல் மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வவுனியா முகாம் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இது இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபரிடம் இருந்து 539 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வவுனியா பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் நீண்டகாலமாக வவுனியா பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.