சந்தையில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்பட்ட பால் மா கையிருப்பு சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசேட கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதியாளர்களை தேவையற்ற சிக்கலில் சிக்க வைக்காமல் அரசு எப்போதும் செயல்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்
இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தரம் பாதிக்கப்படாத வகையில் மிகக் குறுகிய காலத்தில் இந்த விடயம் கையாளப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி இந்த பால் மா இருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் கையிருப்பு சுங்கச்சாவடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நிறுவனம் 15 நாட்களாகியும் சுங்கத்திலிருந்து இந்த பால் மாவை விடுவிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.