இலங்கைக்கான புதிய பிரான்ஸ் தூதுவர் ஜோ ஃபஸ்வா நேற்று (28) பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார்.
இந்நிகழ்வில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு இரு தரப்பினரும் வரவு-செலவுத் திட்ட காலம் மற்றும் நாடாளுமன்ற பணிகள், இரு நாடுகளுக்கு இடையே தற்போதுள்ள நாடாளுமன்ற அமைப்புகள் மற்றும் அரசியல் கட்டமைப்பு குறித்தும் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
மேலும், 2023ஆம் ஆண்டு பிரான்ஸ் இலங்கை இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்த தனது பூரண ஆதரவை வழங்குவதாக புதிய பிரான்ஸ் தூதுவர் ஜோ ஃபஸ்வா சபாநாயகரிடம் தெரிவித்தார்.