நாட்டில் மின்சாரத்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தங்களை முன்வைப்பதற்காக அமைச்சர்கள் குழுவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தொடர்பான தேசிய கொள்கை உபகுழுவின் முன்மொழிவுகள் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன்படி, குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய சட்டமன்ற துணைக்குழுவின் தலைவர் நாமல் ராஜபக்ஷவினால் இது தொடர்பான அறிக்கைக்கு அமைச்சர்கள் சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், தேசிய கொள்கை உபகுழுவின் முன்மொழிவுகளை பெற்றுக்கொள்வதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் தேசிய கொள்கை உபகுழுவின் தலைவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும்,நாளாந்தம் அதிகரித்து வரும் மின்சாரத் தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்ய இயலாமையால் ஏற்பட்ட மின்வெட்டு மற்றும் அதிகளவிலான மின்கட்டண அதிகரிப்பு உட்பட இலங்கையில் மின்சாரத்துறை எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கான தீர்வுகள் உள்ளிட்ட பரிந்துரைகள் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்தோடு,அமைச்சர் கஞ்சன விஜேசேகர வழங்கிய அறிக்கையை ஆய்வு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அந்த அறிக்கையை ஆராய்ந்த பின்னர் தனது யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை தேசிய பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.