ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த 04 கட்சிகளின் தலைவர்கள் இன்று நடைபெற்ற நிறைவேற்றுச் சபையில் பங்கேற்க மறுத்துள்ளனர்.
தேசிய காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. எல். எம்.அதாஉல்லா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் சட்டத்தரணி திஸ்ஸ ஜயவர்தன, காணி விடுதலைக் கட்சியின் டி. கலன்சூரிய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுச் சபைக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகமாக உள்ள அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு மாத்திரமே நிறைவேற்று சபைக் கூட்டத்தை அழைப்பதற்கு அதிகாரம் உள்ளதாக கட்சித் தலைவர்கள் தமது கடிதங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதன்படி இன்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என நான்கு கட்சிகளின் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.