ஹிக்கடுவ, வாவல சந்தி பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
துணி வியாபாரியாக பணியாற்றிய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த அவரது மனைவி சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்.சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி,உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நரிகம பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.