அண்மையில் முட்டை விற்பனைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து நுகர்வோர் சேவை அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரிய மனுவை டிசம்பர் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனுவை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் செய்துள்ளது. குறித்த மனுவானது பிரசாந்த டி சில்வா மற்றும் ஸ்வர்ணதீபி ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது.
மேலும், பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன, உணவுப் பாதுகாப்புக் குழுவிடமிருந்து முட்டைகள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெற்ற பின்னர், நுகர்வோர் சேவை அதிகாரசபையானது முட்டைக்கான தற்போதைய கட்டுப்பாட்டு விலையை மீள்பரிசீலனை செய்யும் என்று நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
அதன் பின்னர், இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டது.