கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் மின் கட்டணத்தை அதிகரிப்பதில் தனக்கும் சிக்கல் இருப்பதாக தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்சஜித் பிரேமதாசவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் நெருக்கடியில் இருக்கும் வேளையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது மனிதாபிமானம் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த், உத்தேச மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அங்கு தெரிவித்தார்.
இதேவேளை, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் நேரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துலா கருத்து வெளியிட்டார்.
இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு மேலதிக வார கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, பாராளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்ட குழு வாய்ப்பு விவாதத்தின் கீழ் கல்வி, பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் ஆகிய அமைச்சுகளின் வரவு செலவுத் தலைப்புகள் மீதான விவாதம் இடம்பெற்று வருகின்றது.
இதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்துள்ளார்.