காங்கசந்துறை இருந்து பயணித்த நகரங்களுக்கு இடையிலான அதிவேக புகையிரதத்தில் பேருந்து மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும், நவக்குளிய புகையிரத கடவைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, காலி, உனவடுன புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள கடவையில் இன்று காலை முச்சக்கர வண்டியொன்று புகையிரதத்துடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதில் முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த வெளிநாட்டு பெண்ணும் உயிரிழந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.