பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயது சிறுமியை வன்புணர்வு செய்ததாக கூறப்படும் 24 வயதுடைய ஆசிரியர் ஒருவரை பன்னல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த ஆசிரியரை குளியாபிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர், அவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தங்கொடுவ, வென்னப்புவ, மாகதுர போன்ற பல பிரதேசங்களில் இந்த ஆசிரியர் விஞ்ஞானம் கற்பித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், பன்னல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலையொன்றில் மாணவி ஒருவரிடமிருந்து கருத்தடை மாத்திரைகள் அடங்கிய கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டதாக பன்னல பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் சாவித்திரி சிறிமான்ன நீதிமன்றில் தெரிவித்தார்.
இது தொடர்பான தொடர் விசாரணைகளின் பின்னர் சிறுமிகளை தடய வைத்தியர் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தி மீண்டும் விசாரணை நடத்திய போது சந்தேகத்தின் பேரில் டியூஷன் ஆசிரியரால் சிறுமி ஒருவர் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உதவி வகுப்பிற்காக அமைக்கப்பட்ட வாட்ஸ்அப் குழுவில் இருந்து சந்தேக நபர் சிறுமியின் எண்ணைக் கண்டுபிடித்து சில தூண்டுதல்களை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சந்தேகநபரான ஆசிரியர் தங்கொடுவ பிரதேசத்தில் மற்றுமொரு வகுப்பில் கற்பித்துக் கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.