மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணையை வாபஸ் பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் அங்கு தெரிவித்தார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவும் கருத்தினை வெளியிட்டார்
அத்தோடு ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு எதிராக தமது கருத்தினை வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மின் கட்டணத்தை மீண்டும் ஒருமுறை அதிகரிப்பதற்கு தானும் உடன்படவில்லை. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு அறிவிக்கவுள்ளதாக சபைத் தலைவர் தெரிவித்தார்.