எதிர்காலத்தில் இலங்கைக்கு தேவையான நிதி உதவிகளை வழங்க சர்வதேச நிதி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைவர்களின் பங்குபற்றுதலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஊடகங்ககளுக்கு தெரிவித்துள்ளார்.