“மண்டுவோஸ்” சூறாவளி காரணமாக இலங்கையின் காலநிலையும் பாதிக்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும், குயின்கோனா நீளம் மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடா வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளில் இதன் தாக்கம் அதிகமாக காணப்படுவதாக திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவின் பணிப்பாளர் சிரோமணி ஜயவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்புஉட்பட நாட்டின்பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்படுகின்றது.
அதற்குக் காரணம் சூறாவளிச் சூழல்தான். இந்தியாவில் இருந்து வரும் காற்றின் ஓட்டம் காரணமாக இலங்கை வளிமண்டலத்தில் தூசி துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் சிரோமணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.