மாளிகாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தை பகுதியில் கடந்த 6ஆம் திகதி இரும்புக் குழாயால் நபர் ஒருவரை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வெலிசர மற்றும் கொழும்பு 14 பகுதிகளில் வைத்து 34 மற்றும் 44 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தெமட்டகொட மற்றும் மருதானை பிரதேசங்களில் 18, 22, 27 மற்றும் 31 வயதுடைய மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று (08) விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளனர்.