பெரு நாட்டின் அதிபர் பதவிக்கு முதல்முறையாக பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பெருவின் முன்னாள் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, அந்நாட்டின் புதிய அதிபராக டினா போலார்டே பதவியேற்றார்.
காஸ்டிலோ காங்கிரஸுக்குப் பதிலாக ஒரு சிறப்பு அரசாங்கத்தைக் கொண்டு வரப் போவதாக முன்னதாக அறிவித்திருந்தார்.
இதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிபர் காஸ்டிலோ பதவி நீக்கம் செய்யப்பட்டார்.