கிளிநொச்சியில் கடும் குளிரான காலநிலை காரணமாக 10க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல மாடுகளின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள கடும் குளிருடன் தமது பிரதேசத்தில் மழை பெய்து வருவதாக கிளிநொச்சி விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.