சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் Kristalina Georgieva, இலங்கை மற்றும் சாம்பியாவில் கடன் மறுசீரமைப்பை துரிதப்படுத்துமாறு சீனாவிடம் கோரியுள்ளார்.
சீனத் தலைவர்களுடனான கலந்துரையாடலின் பின்னரே இது இடம்பெற்றுள்ளது.
சந்திப்பின் பின்னர் அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டதாகவும், சில குறிப்பிட்ட வழக்குகள் தொடர்பாக தனக்கு மிகவும் சாதகமான பதில்கள் கிடைத்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.