ஆணைக்குழுவின் தலைவருக்கு ஜனாதிபதி சவால் விடக் கூடாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், நுவரெலியா தொழிநுட்பக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட தலைவர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இவ்வாறான சவால் ஜனாதிபதி ஒருவருக்கு ஏற்றதல்ல. சில அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தவறான தரவுகளை வழங்கியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 8 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டார். மின் கட்டண திருத்தம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பொறுப்புடைய அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சபைக்கு மட்டுமே உள்ளதாக ஜனாதிபதி அங்கு தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மின்சார கட்டணத்தை மீளாய்வு செய்வதற்கு நியாயமான கோரிக்கை விடுக்கப்பட்டால் மாத்திரமே தேவையான ஆதரவை வழங்குவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மின்சார சபைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவும் தனது கருத்துக்களையும் வழங்கினர்.