உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு அதிக இளைஞர் பிரதிநிதித்துவத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் பத்தரமுல்லையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.