பன்னல பிரதேசத்தில் இரண்டு துப்பாக்கிகளுடன் திட்டமிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது துப்பாக்கிகளுடன் 10 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், டுபாயில் தங்கியிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவரின் நெருங்கிய உறவினர் கட்டான கண்டாவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதையடுத்து, மேலதிக விசாரணைகளின் போது மற்ற இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நீர்கொழும்பு, யக்வில மற்றும் கட்டான பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் 31, 34 மற்றும் 48 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.