போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு இடையில் பண்டாரநாயக்க விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் போன்றவற்றுக்காக முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்படி, துறைமுக அணுகு சாலைத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு வரும் பயணிகளுக்கு ரயில் மூலம் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.