கிழக்கு மாகாணத்தில் இன்று (12) முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இறைச்சி விற்பனை நிலையங்களை மூடுவதற்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் மாடுகள், ஆடுகள் உயிரிழந்து வருவதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கால்நடைகளை ஏற்றிச் செல்வதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.
பின்னர் கால்நடை மருத்துவர்கள் சங்கம் நேற்று செய்தியாளர் சந்திப்பை நடத்தி, இறந்த விலங்குகளை சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு என குறிப்பிட்டிருந்தது.
இதன்படி, கோழி இறைச்சி தவிர்ந்த அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்களையும் மூட உள்ளூராட்சி திணைக்களம் தீர்மானித்துள்ளது.