இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மனுதாரர் ஓஷல ஹேரத் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் மற்றும் பிரதிவாதியாக சமகி ஜன பலவேகவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி ஃபர்மன் காசிம் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இதனை அவசர வழக்காகக் கருதி விசாரணைக்கு திகதியை நிர்ணயம் செய்ய வேண்டும் என வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகள் இருந்தால் ஜனவரி 13 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு டயானா கமகே உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டது.
அதன்படி, இந்த மனு ஜனவரி 26 ஆம் திகதி விசாரணைக்கு வரும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அத்தோடு, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜையாக இருப்பதால், அவர் இந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, அவர் இந்த நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் எனவும், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யும் உத்தரவையும் பிறப்பிக்குமாறும் மனு மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.