பல கோரிக்கைகளின் அடிப்படையில் தபால் ஊழியர்கள் தற்போது அடையாள நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், நாடளாவிய ரீதியில் உள்ள தபால் நிலையங்களில் பணியாற்றும் 27,000 ஊழியர்கள் இந்த தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
இதன்படி, தமது பிரச்சினைகள் தொடர்பில் தபால் மா அதிபருடன் கலந்துரையாடிய போதிலும் தபால் மா அதிபரிடமிருந்து எவ்வித தீர்வும் கிடைக்காத காரணத்தினால் இந்த தொழில் நடவடிக்கையில் இறங்கியதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பில் நாம் மேற்கொண்ட விசாரணையின் போது, இன்று பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்களுக்கு சம்பளமின்றி விடுமுறை வழங்கப்படும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
அத்துடன், நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கைகள் நியாயமற்றவை என தபால் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.