அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு 23 வயதுடைய போராட்டக்காரருக்கு ஈரான் மரண தண்டனை வழங்கி பகிரங்கமாக தூக்கிலிடப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இந்த நாட்களில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு எதிராக ஈரான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இதன்படி, எதிர்ப்பாளர் ஒருவர் தூக்கிலிடப்படுவது இது இரண்டாவது முறையாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, ஈரானில் பாராளுமன்ற உறுப்பினரின் இரண்டு மெய்ப்பாதுகாவலர்களை கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞன் ஈரான் நீதிமன்றில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், கைது செய்யப்பட்ட 23 நாட்களுக்குப் பிறகு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. குறித்த இளைஞருக்கு எதிரான மரண தண்டனையை நிறைவேற்றும் வரை அவரது தாயாருக்கு இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குடும்ப உறுப்பினர்கள் அந்தந்த மயானத்திற்கு சென்று அடக்கம் செய்வதற்குள் ஈரானிய அதிகாரிகள் ஏற்கனவே அந்த இளைஞனின் உடலை அடக்கம் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.