நாட்டின் பல்கலைக்கழக அமைப்பினுள் பாரியளவில் போதைப்பொருள் ஊடுருவல் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து பாதுகாப்பு மற்றும் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று (13) காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலமே பல்கலைக்கழக அமைப்பை பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
அத்தோடு, வன்முறை மற்றும் ஒழுக்கமின்மையுடன் நடந்துகொள்பவர்களின் கல்வியை இரத்து செய்தல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்படுவதன் மூலம் அவர்கள் அச்சம் மற்றும் சந்தேகம் இன்றி பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.