
பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களில் பதிவு செய்யப்பட்ட விலைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்றப்பட்டு அவை தற்போதைய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை யஜரிவித்துள்ளது.
அத்தோடு, பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை தற்போதுள்ள விலைகளை மாற்றி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் பயிற்சி புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், பாடசாலைப் பயிற்சி புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதால் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற் கொண்டு இது தொடர்பான சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.