
60 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் வடகடலில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் இருந்தது 181 கிலோ கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
அத்தோடு, சந்தேகத்திற்கிடமான வகையில் டாங்கி படகு ஒன்றை சோதனையிட்ட போது, 04 சாக்குகளில் பொதி செய்யப்பட்ட இந்த கேரள கஞ்சாவை கண்டெடுத்ததாக கடற்படையினர் மேலும், தெரிவித்தனர்.