சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தாமதப்படுத்தப்படுவதால் நாட்டின் பொருளாதாரம் மேலும் சுருங்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் கலாநிதி ஷனுகா செனரத் தெரிவித்துள்ளார்.
மேலும், பொருளாதார வீழ்ச்சியின் ஊடாக நாட்டின் தொழில்துறைகள் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், முந்தைய ஆண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 11 வீதம் மற்றும் 8 பத்தில் 8 வீதத்தால் சுருங்கியுள்ளது என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது.
அதன்படி, 2022 இன் மூன்றாம் காலாண்டில், விவசாய, தொழில்துறை மற்றும் சேவை பொருளாதார நடவடிக்கைகளில் சரிவு ஏற்பட்டது. தொழில்துறையில் பொருளாதார நடவடிக்கைகள் 21.2 சதவீதம் குறைந்துள்ளது.