மலேசியாவின் சிலாங்கூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர். 400 மீட்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் 12 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், உயிரிழந்தவர்களில் 5 சிறு குழந்தைகளும் 12 பெண்களும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, செங்குத்தான மலைப்பாங்கான பகுதியில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், விபத்தின் போது மூன்று குழந்தைகள் உட்பட 51 பேர் அங்கு முகாமிட்டிருந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு. எவ்வாறாயினும், குறித்த இடம் முகாமிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட இடம் அல்ல என இது தொடர்பான செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.