
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்ன இன்று முதல் அட்மிரல் தரத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 2020 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் திகதி வைஸ் அட்மிரல் தரத்திற்கு பதவி உயர்வு பெற்று இலங்கை கடற்படையின் 24 ஆவது கடற்படைத் தளபதியாக தனது கடமைகளை ஆரம்பித்த வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்ன, பதவி உயர்வுக்குப் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடற்படைத் தளபதியாக பதவி உயர்வு வழங்கி இன்று மரியாதை செலுத்தப்பட்டது.
அத்தோடு, 1985ஆம் ஆண்டு 13ஆவது கேடட் ஆட்சேர்ப்பில் இலங்கை கடற்படையில் கெடட் அதிகாரியாக கடமையாற்றிய அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, 37 வருடங்களுக்கும் மேலாக கடற்படைக்காகவும் தாய்நாட்டிற்காகவும் தோற்கடிக்க முடியாத சேவையை ஆற்றிவிட்டு நாளை (18) ஓய்வுபெறவுள்ளார் என்பது குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.