நாட்டில் பயிர் செய்யப்படாத அனைத்து நிலங்களையும் பயிர் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதால், தரிசு நிலங்களை 5 வருடங்களுக்கு அரசாங்கத்தால் சுவீகரித்து, நிலம் இல்லாத இளம் சமூகத்தினருக்கு 5 வருடத்திற்கு விவசாயம் செய்ய வழங்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும், 5 வருடங்களின் பின்னர் அந்தந்த காணிகளில் பயிர் செய்தவர்களுடன் ஒப்பந்தம் செய்து நில உரிமையாளர்கள் தேவைப்பட்டால் பயிர் செய்யலாம் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் அறுவடையில் ஒரு பகுதியை நில வாடகையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்தோடு, தற்போது நாட்டில் பயிரிடக்கூடிய சுமார் 100,000 நிலங்கள் தரிசாக விடப்பட்டுள்ளன. அதிலும் பெரும்பாலான வயல்வெளிகள் மேல் மாகாணத்தில் அமைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி, காணி உரிமையாளர்கள் சிலர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.