தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் செல்பி எடுக்க சென்ற மூவர் புகையிரதத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளனர்.
மேலும், இவ்விபத்தில் அங்கிருந்த இளைஞன் ஒருவரும் யுவதியும் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மற்றைய இளைஞன் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, இன்று (17ஆம் திகதி) காலை 10.50 மணியளவில் மருதானையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த புகையிரதம் இவர்கள் மீது மோதியதில் குறித்த இளைஞனும் யுவதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோட, உயிரிழந்த இருவரும் 21 வயதுடைய கரந்தெனிய மற்றும் வத்துகெதர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.