தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் கொலை தொடர்பாக இதுவரை 23 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பிலான சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்கு விசாரணைக் குழுக்கள் செயற்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
ஒவ்வொரு துறையையும் உள்ளடக்கி விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.