கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சீனா பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், சீனாவில் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் பின்னணியில் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள இறுதி ஊர்வலங்கள் மற்றும் தகன அறைகள் நிரம்பி வழிவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கு முக்கிய காரணம் அந்த இடங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பணியாளர்கள் பற்றாக்குறையின் பின்னணியில் இறுதிச் சடங்குகள் மற்றும் சுடுகாடுகளுக்கு சடலங்கள் கிடைக்கப்பெறுவது அதிகரித்துள்ளமையினால் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பெய்ஜிங்கில் தங்கியுள்ள சில வெளிநாட்டு ஊடகவியலாளர்கள், பல சடலங்கள் இறுதிச் சடங்கில் மஞ்சள் பாலித்தீன் பைகளில் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
எனினும், இந்த மரணம் கொரோனா வைரஸால் ஏற்பட்டதா என்பதை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, சீனா அதிகாரிகள் சமீபத்தில் நாட்டில் தற்போதைய கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியதை அடுத்து இந்த நிலைமை சீனாவில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கடந்த 7ஆம் திகதி முதல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து சீன அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.