( எம்.என்.எம்.அப்ராஸ்,நூருல் ஹுதா உமர்)
டயக்கோனியா சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தினுடைய அனுசரணையில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல்முன்னணியினுடைய ஏற்பாட்டிழும் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதில் ஊடகங்களினுடைய பங்களிப்பு மற்றும் குடும்பரீதியில் பெண்கள்,சிறார்கள் மத்தியில் தாக்கங்கள் குறித்தும் அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்த இளம் ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வினுடைய இரண்டாவது செயலமர்வானது கல்முனையில் நேற்று (18) இடம்பெற்றது.
மேலும், இந் நிகழ்வில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியினுடைய நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தரான யூ.எல்.ஹபீலா அவர்களுளுடைய பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
அத்தோடு. இச் செயலமர்வின் வளவாலர்களாக சிரேஸ்ஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எல்.அப்துல் அஸீஸ் அவர்களும், உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.பி.அப்துல் சுக்கூர்ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.எல்.எப்.சிபாயா, பி.ஜெனித்தா மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான எஸ்.எம்.ஏ.நஜீப்,எஸ்.நிஸாந்தினி மற்றும் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் அலுவலக கணக்காளர் ஆர்.அனுஸ்கா உட்பட இளம் ஊடகவியலார்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வின் இறுதியில் பயிற்சி நெறியில் கலந்து கொண்ட இளம் ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்களும் போட்டிகளை வெற்றிபெற்ற உடகாவியலாளர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்க விடையமாகும்.