தனது சேவையை முடித்துக்கொண்டு தனது நாட்டிற்கு செல்லும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர் இன்று காலை னாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியின் சேவைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஹனா சிங்கர் செப்டம்பர் 7, 2018 முதல் இலங்கையில் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார்.