தெற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த மூன்று நாட்களில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இந்த நாட்டின் கரையை அடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இதன் காரணமாக மத்திய வங்காள விரிகுடா மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்க கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே குறித்த கடற்பரப்புகளில் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் எச்சரிக்கை விடுத்துள்ளது.