இந்நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசாங்கம் 5 பில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலைச் சீருடைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
மேலும்,, துணியின் முதல் பாகம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்நாட்டிலுள்ள சீனா தூதரகம் அறிவித்துள்ளது.
அத்தோடு, இந்த நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடம் சீருடைக்காக வழங்கப்பட வேண்டிய துணி கையிருப்பில் 70 சதவீதத்தை பூர்த்தி செய்வதற்கு சீனாவினால் வழங்கப்பட்ட துணி கையிருப்பு போதுமானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சீருடைகளின் முதல் பாகத்தை ஏற்றிய கப்பல் ஜனவரி 6 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாகவும் சீனா தூதரகம் அறிவித்துள்ளது.
மேலும், இலங்கை மாணவர்களுக்காக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான தூரத்தை விட சுமார் பத்து மடங்கு நன்கொடை அளித்துள்ளதாகவும், அதில் பெருமிதம் கொள்வதாகவும் இலங்கைக்கான சீனா தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.