வெளிநாட்டுக் கடன் முகாமைத்துவம் மற்றும் உள்நாட்டுக் கடன் முகாமைத்துவம் என்பவற்றின் அடிப்படையிலும் அடுத்த வருடத்தில் சிக்கல் நிலை உருவாகலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், தற்போதைய நிலவரங்களை கருத்தில் கொண்டு நாட்டின் பொருளாதாரம் மீள்வதற்கு எதிர்பார்த்ததை விட அதிக காலம் எடுக்கும் சாத்தியம் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பாரிஸ் கிளப் தவிர்ந்த இலங்கை கடன் பெற்ற ஏனைய நாடுகள் கடன் முகாமைத்துவ வேலைத்திட்டத்திற்கு இன்னும் இணங்கவில்லை எனவும் பேராசிரியர் வசந்த அத்துகோரள மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தற்போதுள்ள அதிக வட்டி வீதத்தை குறைக்க மத்திய வங்கி செயற்பட வேண்டும் எனவும் பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டியுள்ளார்.